மேகத்தை அடையாளம் வைத்து
ஆட்டுக்குட்டியை விட்டுப் போனவன்
கதையை நீ சொல்லக் கேட்டு சிரித்தேன் .....
அதேபோலொரு மேகத்தின் கீழ்
என்னை நிற்க வைத்துப்
பேசிகொண்டிருப்பதை உணராமல் .....
உன்னை சிரிக்க வைப்பதற்காக
மீசையை சிரைத்துக் கொண்டேன்
என்னை பார்த்துப் பலரும்
தலையிலடித்துக் கொண்டார்கள்
பழந்துணிகளை சேகரித்து
கோமாளியாகக்கூட
வேஷம் போட்டிருக்கிறேன்
உன் பொழுது கலகலப்பாக போக...
என் பிழைப்பு நாறிக் கொண்டிருப்பது தெரியாமல் .....
என்னை உனக்காகக் கடலுக்குள்
கரைத்து கொண்டிருந்தபோது
நீ ஆவியாகி மேகத்தை அடைந்திருந்தாய் ....
மழையாவதே உன் லட்சியம்
என் மூளையை
உனக்காக செலவழித்தேன்
உன் மூளை மூலதனமாகியிருந்தது
என்னை கவசமாகிக் கொண்டு
நீ போரிட்டாய்
உன் ராஜியத்தை அடைந்ததும்
என்னை பழைய கடையில்
எடைக்கு போட்டாய்....
காதலின் பெயரால்
நான் முட்டாளானபோது
யதார்தத்தின் பெயாரால்
நீ மேதையாகியிருந்தாய். -கவிஞர் தாமரை.
Friday, August 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment