வார்த்தைகளின் உறைதலில்
உனக்குள் கிட்டித்துப் போன மௌனம்
பனிகாலத்தில் திறக்காத கதவுகள்
என்னுடையதோ ஒரு தவம்
நினைந்து காக்க முயன்றாலும்
விரலிடுக்கில் சிறைப்படாத புகை
நீ ஒன்று செய்யேன்
மௌனத்தின் தடங்கள்
மெல்ல பிடிபட வேண்டின்
சப்தங்களிலிருந்து மீளப்
பழகிக் கொள்ளேன் .
-நீ...நான் ...மற்றும் ...
தி .சந்தானம் .
Friday, August 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment