தமிழ் இனிது
வணக்கம் . இது எனது முதல் பதிவு.
தமிழ் எனது தாய் மொழி என்பதால் பெருமை படும் தமிழரில் நானும் ஒருவன்.தமிழ் என்னை வளபடுதியது.தமிழ் என்னை எழுத சொல்லியது. தமிழோடு வளர்ந்தவன்.என் அன்னை தமிழுக்கு நன்றியுடன் எனது முதல் பதிவு.
தமிழுக்கும் அமுதென்று பேர்!
அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்!
இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்!
இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!
இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
பயணங்கள் என்னை செழுமை படுத்தியது.என்னை பாதித்த விஷயங்கள் ,பிடித்த நினைவு குறிப்புகள் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.இனி தமிழுடனும் ,உங்களுடனும் இந்த பயணம் தொடரும்.