skip to main |
skip to sidebar
ரயில் சந்திப்புகள் தோறும்
பிரிவுகளின் சாட்சியாய்
அழுது சிவந்த முகங்கள்
தண்டவாளங்களின் சத்தங்கள்
பெறும் கேவல்களென குரலெடுக்கின்றன
கண்ணீரில் தோய்ந்த பயணங்கள்
கசகசத்து கொண்டே இருக்கின்றன
பிரிந்து விடுவதில் இருக்கும் தைரியம்
பிரிவை பார்ப்பதில் இருப்பதில்லை
- லீனா மணிமேகலை.