Monday, March 31, 2014

பயணங்கள்

ரயில் சந்திப்புகள் தோறும்
பிரிவுகளின் சாட்சியாய் 
அழுது சிவந்த முகங்கள்

தண்டவாளங்களின் சத்தங்கள்

பெறும் கேவல்களென குரலெடுக்கின்றன

கண்ணீரில் தோய்ந்த பயணங்கள்

கசகசத்து கொண்டே இருக்கின்றன

பிரிந்து விடுவதில் இருக்கும் தைரியம்

பிரிவை பார்ப்பதில் இருப்பதில்லை 

- லீனா மணிமேகலை.