Thursday, April 15, 2010

கவிதை இறகு -சித்திரை

கை நழுவிய சொல்லொன்று
நிலம் பிளந்து
உள்ளிரங்கியது.
எங்கெங்குமாய் கிளைதெழுந்த
செடிகள் தோறும்
சொற்கள் காய்த்தன.
காத்திருப்பின் நீள்பொழுதில்
கனியவேயில்லை,
ஒரு சொல் கூட.
வெறுமையின் கூடுடைத்து
திரும்பி நடக்கையில்…
காய்த்திருந்த சொற்கள்
பூவாய் மாறியிருந்தன
மறுபடியும்.

- மு.முருகேஷ்