Monday, December 24, 2012

மின்னல்


ககனப் பறவை
நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை

கடலுள் வழியும் அமிர்த தாரை
கடவுள் ஊன்றும் செங்கோல்

- பிரமிள் .

கவிதை இறகு -மார்கழி

பயணம் முடிந்த பின்பு
நழுவ விட்ட பஸ் டிக்கெட்

டைப்ரைட்டர் உருளையிலே
பட படக்கும் கார்பன் தாள்

மலைச்சாரல் சாய்ந்திறங்கி
நனைக்காத சாலை ஓரம்

அசைகின்ற வைப்பர் நுனி
துடைக்காத மழைப் புள்ளி 

 நிராகரிப்பின் சின்னச் சின்ன 
விசும்பல்கள் எனக்குள்ளே 

 -தி.சந்தானம்
 "நீ...நான்...மற்றும்.."