Saturday, August 15, 2009

அஞ்சுவண்ணம் தெரு

அஞ்சுவண்ணம் தெரு
-தோப்பில் முகம்மது மீரான்

சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் எழுதிய "அஞ்சுவண்ணம் தெரு" வாசிப்பில் ஒரு புதிய அனுபவத்தை உங்களுக்கு தரும். திருப்பங்கள் ஏதும் இல்லது சுவாரசியமான ஒரு குடும்பத்தின் கதையை மட்டும் அல்லாது அஞ்சுவண்ணம் தெரு என்ற ஒரு தெருவின் அனுபவங்களை நாவலாக தந்திருக்கிறார்,கூடவே தலைமுறை மாறும்போது ஏற்படும் முரண்பாடுகளையும் தெளிவாக வாசகன் புரியுமாறு தந்திருப்பது சிறப்பு.

முகமறியா ஒருவர் தன் வாப்பாவை பற்றி சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த நாவல்.இஸ்லாமிய பழக்கவழக்கங்களை அதன் மொழியிலே எழுதிஇருந்தாலும் அங்கங்கே அவற்றின் தமிழ் விளக்கங்களும் இருப்பதால் தடை இல்லாமல் படிக்கமுடிகிறது.

நபிஷா மன்ஜிலில் இருந்து தாருல் ஷகீனா (என்ன அழகான பெயர்)விற்கு குடிவரும் ஒரு குடும்பத்தின் கதை இது.அஞ்சுவண்ணம் தெரு-வில் உள்ள அத்தனை மனிதர்களை பற்றியும் அழகாக விவரித்திருக்கிறது இந்த நாவல்.அத்தனை மனிதர்களும் நம் மனதில் தங்கி விடுகிறார்கள்.எழுத்தின் அத்தனை சுவைகளையும் விரும்பி படிக்கும் அனைவரும் தவற விடாத புத்தகம் இந்த அஞ்சுவண்ணம் தெரு.
வாப்பா,மம்மதும்மா,குவாஜா அப்துல் லத்திப்ஹஜ்ரத்,என்று வரும் அனைவரும் வாழ்ந்து இருகிறார்கள் இந்த அஞ்சுவண்ணம் தெருவில்.கூடவே ஒரு சத்தியமுள்ள பாம்பும்,மருதுவான் மலை காற்றும் மற்றும் மகாமூதப்பா தைக்காப் பள்ளிவாசலும். யாருக்காக இல்லாவிட்டாலும் மைதீன் பிச்சை மோதீன்-காக படியுங்கள்.இந்த அஞ்சுவண்ணம் தெருவின் ஜீவன் அவர்.

படித்து முடிக்கையில் புதிய வாசிப்பின் அனுபவம் மட்டும் அல்லாது.சகலத்தையும் நேசிக்கும் மனிதர்களை இந்த அஞ்சுவண்ணம் தெருவில் நீங்கள் பார்த்திருப்பிர்கள்.
அஞ்சுவண்ணம் தெரு உங்கள் நெஞ்சில் நிறையும்.

"அஞ்சுவண்ணம் தெரு"
அடையாளம்,
1205/1 - கருப்பூர் சாலை.
புத்தாநத்தம்-621310
திருச்சி மாவட்டம்.
தொலைபேசி-௦04322 273444

விலை - 130.

No comments:

Post a Comment