Thursday, August 27, 2009

துக்கம் விசாரிக்க வருவோருக்கு

நீங்கள் ஒருவேளை சமயம் வாய்க்கையில்
இப்படி ஒரு ரவுண்டு
வந்து விட்டுப் போங்கள்!

துணைக்கு கூட
ஒருஆள் இல்லாமல் தான்
நான் இங்கனம் குள்ளையே
சுத்திகிட்டு இருக்கேன்

மேம்போக்கா சும்மா
எட்டிப்பார்த்தாப்பிலே
தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு
கூட ஒரு எட்டு
வந்துட்டு போயிடுங்களேன்.


உங்க கூட பேசுனாப்பிடியுமிருக்கும்
அப்பிடியே ஒரு தபா
பார்த்த மாதிரியுமிருக்கும்.


என்னடா எழவு கூப்பிட்டுக்கினே
கிடந்தானே.. தாயொலி
போயித் தொலையரதுக்குள்ளார
பார்த்தாவது தொலச்சம்னு இருக்கும்
எனக்குன்னு யார் இருக்கா
ஒலகத்துல உங்களைத் தவிர!


உங்களக் கூப்பிடாம நானு
யாரக் கூப்புடுவேன்- அப்புடியுமில்ல
நான்தா உங்கள வந்து பாக்கலாமின்னா
நீங்க பலசோலிக்காரங்க!
எங்க சுத்துரீங்களோ!
நேரா நேரத்துக்கு சாப்பிடரீங்களோ என்னமோ!
சித்த சாமி சாமியா இருப்பீங்க

நேரங் கெடைக்கறப்ப ஒரு நடை வந்துட்டுப் போயிடுங்க!

வந்து இன்னார்ன விசாரிச்சலே
சொல்லி உட்டுருவாங்க..
அந்த தாயோலியா..
அவன் அங்கனதான் கிடப்பான்னு!
-வா.மு. கோமு.

No comments:

Post a Comment