Saturday, August 15, 2009

தவறினால் நீ தறுதலை...

கடவுளுக்காக
மொட்டையடித்துக்
கொள்கிறான்
மனிதன்.......
மனிதனுக்காக
ஒரு மயிரையும்
இழக்கத் தயாராய் இல்லை
கடவுள்.
-பாரதி ஜிப்ரான்
புறப்படுகையில்
பூனை குறுக்கே!
சகுனம் பார்த்து
திரும்பும் நீ
மனிதனா?
சுண்டெலியா?
-கோவை.சதாசிவம்.
படி
வேலை தேடு
மணந்து கொள்
குழந்தை பெறு
குடும்பத்தோடு
சினிமாவுக்குப் போ
சொத்து சேர்
சுகமாயிரு
அடுத்தவனுக்காக
அலட்டிக் கொள்ளாதே
தவறினால்
நீ
தறுதலை.
-முகில்
இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?
-சுகிர்தராணி.
‘நீரு’ என்கிற நீரஜா

கடல் ரொம்பவும் பிடித்துப்போனது
‘நீரு’வுக்கு.
அம்மா அதட்டிக்கொண்டே இருந்தால்
அலைகள் பெரிதென.

எதைப்பற்றியும் கவலையின்றி
தனக்குத் தெரிந்த நடன அசைவுகளை
நிகழ்த்திக்கொண்டே…
அலைகளோடு விளையாடிக்
கொண்டிருக்கிறாள்.

கணங்களை
அணு அணுவாய்க் கொண்டாட,
அவள் போல இருக்க வேண்டும்
அல்லது
அவளாகவேயிருக்க வேண்டும்
-யாரோ. என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத
நீர் என்ன கடவுள்?
- கவிஞர் நீலமணி.

No comments:

Post a Comment