Sunday, May 16, 2010

நீ

பெருமழை பெய்து ஓய்ந்தவுடன் ஒரு நிசப்தம்
துவைத்து எடுத்ததுபோல் உலர்ந்துவிடும் இதயம்
பார்வை அறுந்து போக
நீ மறையும் போதும்

மேகம் ஊடாடி நிலவு ஒளிந்ததும் ஒரு வெறுமை
கழற்றி வைத்ததுபோல் வடிந்துவிடும் கண்கள்
கைகள் கழன்றுபோக
நீ விடுவித்த போதும்

அலை மடிந்து அலை மீள்வதற்குள் ஒரு தனிமை
களவு போனதுபோல் ஒடுங்கிவிடும் மூச்சு
குரல் விண்டுபோக
நீ விலகும்போதும்

உள்ளத்தின் பெரு விளைவு நீ.

-லீனா மணிமேகலை.
"ஒற்றையிலையென."

No comments:

Post a Comment