Sunday, May 16, 2010

கூப்பிடும் தூரத்தில் உனது தீவு

மேகம் கவியும் கரையோர
மாலை நேரத்தில் என் முன்னே
நடந்து செல்கிறாய்
உனது இடது கை
வீசி அசைய
அசையா வலது கைக்கு
உனது கருப்பு நிறத்துக்கு ஒத்துவர
கபில நிறத்தில்
வண்ணம் அடித்துள்ளாய்

சிறு செடி நட
என்னை வாரி அணைக்க
நமக்கான சில வரிகளை எழுத
வேறு என்ன கனவு உண்டு
வீழ்த்தப்பட்ட
அந்த ஒற்றை கைக்கு

அங்கிருந்து இங்கு நீ கொண்டு வந்த
உனது ஒரு பிடி தாய்மண்ணை
எனது கனவுகளில் கொட்டிப்பரப்பி
உனது அடையாளத்தை சீய்க்கும்
அகதி வாழ்க்கை

கூப்பிடும் தூரத்தில் உனது தீவு
-மாலதி மைத்ரி.
"சங்கராபரணி"

No comments:

Post a Comment