Tuesday, May 11, 2010

மிதக்கும் மகரந்தம்

பாதம் பாவாமல் எச்சரிக்கையாக
வந்தால் உணரலாம்
எல்லா இடங்களும் மலரின் சாட்சியங்களே
அரும்பும் மொட்டுகள் இதழ்விரியும்
விரிந்த நேரத்தில் தடைபடும் கூம்பல்கள்
என வாசம் விரியும்
வீடுகளின் தோற்றங்களிலும்
எதிர்ப்படும் முகங்களிலும்
மிதக்கும் தாவும் மலர்களென
பறவைகள் விலங்குகள்
முகிழ்க்கும் தூரத்து மலைகள்
பச்சைப் பூச்செண்டுகளாய் மரங்கள்
பெருமலரொன்றின்
ததும்பும் தேனூற்றில்
மிதக்கும் மகரந்தம் நானும்.
-எழிலரசி.

No comments:

Post a Comment