Sunday, May 16, 2010

நீக்கமுடியாத வரிகள்

நீ அங்கிருந்த வேளை
நிலைகண்ணாடிப் பிம்பமென
எப்படியோ வந்துவிட்டது
சில வருத்தங்களும் வலிகளும்

என் நினைவுகளில்
உன்னைப் பற்றிய வரிகளை
நீக்கிவிடச் சொல்லி மன்றாடுகிறாய்

உனக்கு புரிவதில்லை
உன்னை பற்றிச் சொல்லாமல்
வலியைப் பற்றி மட்டுமே பேசுமென்
சாத்தியமின்மை
-சல்மா
"பச்சை தேவதை "

No comments:

Post a Comment