Tuesday, May 11, 2010

பிரிய‌மென்ப‌தை த‌விர‌

தாழப் ப‌றந்திடும் மேக‌மொன்று
பிடிவாத‌மாய்
இட‌ம் மாறி மாறி
ம‌றைந்திருக்கும் உனது
பாறைப் பிரிய‌ங்க‌ளில் பொழிவிக்க‌
காத்திருக்கும் அட‌ர்ம‌ழையை

காற்றை அலைக்க‌ழிக்கும்
பிரிய‌ங்க‌ளில் நிழ‌ற்குடை
க‌டும் சிர‌ம‌த்தோடு த‌ன்னை
ஆழ‌ப் ப‌ற்றிக் கொண்டு
உன‌து வெயிலிலும் ம‌ழையிலும்
ந‌னைந்த‌ப‌டி த‌ந்திருக்கும் நிழ‌லினை

பெருங்கருணையோடிருக்கும்
பிரிய‌ங்க‌ளுக்கும்
பிரிய‌மென்ப‌தை த‌விர‌
கார‌ணிக‌ள் வேறு
எப்போதுமில்லை.
-லாவண்யா சுந்தரராஜன்

No comments:

Post a Comment