பசியோடு அலைந்தவனுக்குப்
பாவப்பட்டு உணவளித்தேன்.
எனது சம்மதமின்றியே
வீட்டில் சேர்ந்து கொண்டான்.
காவல் வேலையை
கருத்தாகச் செய்தான்
சம்பளப் பிரச்சனை ஏதுமில்லை.
ஓரிரு கவளம் சோறு போதும்.
பிள்ளைகள் விளையாட
பொம்மையானான்.
வயசுக்கு வந்த மகளை
பள்ளிவரை சென்று
விட்டு வந்தான்.
கொல்லையில் மனைவி
குளிக்கும்போது கூட
தட்டியருகே நின்று
இசட் பிரிவு பாதுகாப்பளிப்பான்.
என்னோடு வயலுக்குத்
துணையாக வருவான்.
அவனது காவலில்
கோழியும், குஞ்சுகளும்,
வெள்ளாடும், குட்டிகளும்
காளைகளும், எருமைகளும்
பத்திரமாக இருந்தன.
எல்லோரும் அவனை
"நாய்" என்று சொல்லுகிறார்கள்.
நான் மட்டும் அவனை
"நண்பன்" என்றுதான் அழைக்கிறேன்.
-வி. சகாயராஜா
Tuesday, May 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment