எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
என் அடர்ந்த வனங்களில்
படர்ந்த முதல் சூரியக் கிரணம் நீ
ஏனோ இப்போது
என் காட்டில் குயில்கள் எல்லாம்
கூவித் திரிகின்றன
உன் பெயரை....
உன் வருகைக்குக் காத்திருக்கும்
என் வாசனைப் பூக்கள்....
நீ கால் நனைக்க
கன்னம் சிவக்கும்
என் காட்டு நீரோடை.....
எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
ஏனோ இப்போது
என் வசமில்லை என் வனம்
ஏன் நுழைந்தாய் உன் புல்லாங்குழலுடன்
என் ஏகாந்த வனத்தில்......?
-ஜான்சி ராணி.
Saturday, May 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment