Tuesday, February 2, 2010

பிழை திருத்தம்

பிழை திருத்தம்

தொல்காப்பியத்தில்
பிழை திருத்தம்
திணைகள் ஆறு
கொய்தல் திணை
முள்ளும்... முள்வேலிசார்ந்த இடமும்.

புறநானூற்றில்
பிழைதிருத்தம்
‘யாதும் ஊரே’
சிங்களம் தவிர...
‘யாவரும் கேளிர்’
சிங்களனைத்தவிர...

இந்திய விடுதலைப்போருக்கும்
ஈழ விடுதலைப்போருக்கும்
சிறு வேறுபாடுதான்
இந்திய விடுதலைப்போரில்
தமிழன் இந்தியனாகி மடிந்தான்
ஈழப்போரினால்
இந்தியன் தமிழனாக மலர்ந்தான்.

-அய்யாறு ச.புகழேந்தி.

No comments:

Post a Comment