Thursday, February 25, 2010

இருத்தல்

வெகுநாள் கழித்து
பக்கம் புரட்டியதில்
தன்னை நினைவூட்டியது
மயிலிறகு

எதன் பொருட்டேனும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்
அழகாயிருக்கிறதென்றோ..
சில நினைவுகளுக்காகவோ..
அல்லது
குட்டி போடும் என்றோ..

இப்போது,
இறகு தொலைத்த அப்பறவையுமில்லை
நீயுமில்லை
- சகாராதென்றல்

No comments:

Post a Comment