Friday, February 12, 2010

சாமி செய்வது தப்பில்லையா

நெருப்பு ஏன் சுடுகிறது

சுடக்கூடாது என்று அதற்கு யாரும்
ஏன் சொல்லித் தரவில்லை

கடல் உப்புக் கரிக்கிறது
மீன் ஏன் கரிப்பதில்லை

தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்
சரி சாமி செய்வது தப்பில்லையா

குழந்தைகள் பேசிப் பேசி
பெரியவர்கள் ஆகிறார்கள்
-ரமேஷ் பிரேம்.

No comments:

Post a Comment