எரிவதில் உள்ள
சுகம்
விட்டிலுக்குத்தான் தெரியும்
எனக்குத் தெரியும்
உன்னைக் காதலிப்பதென்பது
என்னைச் சிலுவையில்
அறைந்துகொள்வதாகும்ஞாபகங்கள்
உனக்கு ஒற்றடை
எனக்கு வீடு
வா, மறதியின் இருட்டில்
ரகசியமாய் சந்திப்போம்
உன் கண்களுக்கு அஞ்சி
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்மறைக்கிறேன்
மேகமாகி
உன்னைப் பிரிவதும்
நதியாகி
உன்னைத் தேடி வருவதும்
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
நீ என்
சூரியனுக்கும் மலர்வதில்லை
சந்திரனுக்கும் மலர்வதில்லை
நீ ஒரு வாழைப் பூ
-கவிக்கோ அப்துல் ரகுமான்.
Wednesday, February 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment