Wednesday, February 10, 2010

மின்மினிகளால் ஒரு கடிதம்

எரிவதில் உள்ள
சுகம்
விட்டிலுக்குத்தான் தெரியும்
எனக்குத் தெரியும்
உன்னைக் காதலிப்பதென்பது
என்னைச் சிலுவையில்
அறைந்துகொள்வதாகும்
ஞாபகங்கள்
உனக்கு ஒற்றடை
எனக்கு வீடு
வா, மறதியின் இருட்டில்
ரகசியமாய் சந்திப்போம்
உன் கண்களுக்கு அஞ்சி
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்மறைக்கிறேன்
மேகமாகி
உன்னைப் பிரிவதும்
நதியாகி
உன்னைத் தேடி வருவதும்
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
நீ என்
சூரியனுக்கும் மலர்வதில்லை
சந்திரனுக்கும் மலர்வதில்லை
நீ ஒரு வாழைப் பூ
-கவிக்கோ அப்துல் ரகுமான்.

No comments:

Post a Comment