நேற்று யாரோ ஒருத்தர்
இன்று நான்
நானிருக்கிமிடத்தில்
நாளை வேரொருவர்
அவருக்குப் பிறகு மற்றொருவர்
நான் அவர்களை வெறுக்கவில்லை
நேசித்தேனா தெரியவில்லை
அவர்களும்
என் போல் தான்
என்னைக் கடந்து சென்றிருக்கக் கூடுமோ?
அனுமானத்தோடும்
சந்தேகங்கள் நிறைந்தும்
சுழற்சி முறையில்
நகர்கிறதிந்த மானுடம்!
-பா.ராணி.
Friday, March 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment