இன்று நான்
நானிருக்கிமிடத்தில்
நாளை வேரொருவர்
அவருக்குப் பிறகு மற்றொருவர்
நான் அவர்களை வெறுக்கவில்லை
நேசித்தேனா தெரியவில்லை
அவர்களும்
என் போல் தான்
என்னைக் கடந்து சென்றிருக்கக் கூடுமோ?
அனுமானத்தோடும்
சந்தேகங்கள் நிறைந்தும்
சுழற்சி முறையில்
நகர்கிறதிந்த மானுடம்!
-பா.ராணி.
No comments:
Post a Comment