Friday, March 26, 2010

ஒரு வழிப்பயணம்

நேற்று யாரோ ஒருத்தர்
இன்று நான்
நானிருக்கிமிடத்தில்
நாளை வேரொருவர்
அவருக்குப் பிறகு மற்றொருவர்

நான் அவர்களை வெறுக்கவில்லை
நேசித்தேனா தெரியவில்லை

அவர்களும்
என் போல் தான்
என்னைக் கடந்து சென்றிருக்கக் கூடுமோ?

அனுமானத்தோடும்
சந்தேகங்கள் நிறைந்தும்
சுழற்சி முறையில்
நகர்கிறதிந்த மானுடம்!
-பா.ராணி.

No comments:

Post a Comment