Saturday, March 20, 2010

சிறுநளினம் தெளித்த விழி

நிலவைப் பிடித்துச் – சில
கறைகள் துடைத்துக் – குறு
முறுவல் பதித்த முகம்.
நினைவைப் பதித்து – மன
அலைகள் நிறைத்துச் – சிறு
நளினம் தெளித்த விழி.
தரள மிடைந்து – ஒளி
தவழக் குடைந்து – இரு
பவளம் பதித்த இதழ்.
முகிலைப் பிடித்துச் – சிறு
நெளிவைக் கடைந்து – இரு
செவியில் திரிந்த குழல்.
அமுதம் கடைந்து – சுவை
அளவிற் கலந்து – மதன்
நுகரப் படைத்த எழில்.
-நா.பார்த்தசாரதி.

No comments:

Post a Comment