Thursday, March 18, 2010

நீரில் அலையும் முகத்தில்

அங்கப் போகாதே
அதை எடுக்காதே
கீழே இறங்கு,
மேலே ஏறாதே,
பேசாம இரு,
சத்தம் போடாதே,
தூங்கு சீக்கிரம்
தொண தொணன்னு பேசாதே
இவற்றோடு
லேசான ஒரு கையுயர்த்தலும்
போதுமானதாயிருக்கிறது
குழந்தைகளை
நம் உலகத்திற்கு
அழைத்துக் கொள்ள...
-அ.வெண்ணிலா.
"நீரில் அலையும் முகத்தில்"

No comments:

Post a Comment