Saturday, October 31, 2009

பிறப்பொக்கும்...

ஆண் என்று சொல்லி
பெருமைப்பட
எதுமிருப்பதாய் தெரியவில்லை.

சாவு வீடுகளில்
மாரடித்து கதறியழும்
பெண்களை கவனியாதது போல்,
கதறவும் முடியாமல்
அழவும் தெரியாமல்
திண்ணையில் வாய்ப்பொத்தி
வெறுமனே உட்கார்ந்திருக்கும்
ஆண்களைப் பார்க்கும் போதெல்லாம்.
-மு.முருகேஷ்.

No comments:

Post a Comment