காலமெனும் பெரும்பரப்பில்
காதல்மகள் நடக்கின்றாள்
கோலமெலாம் தனதாகக்
கொண்டமகள் நடக்கின்றாள்!
ஞாலமெனும் பெரும்பரப்பில்
ஞானமகள் நடக்கின்றாள்
மூலமெனும் பொருளறிய
முனைந்தமகள் நடக்கின்றாள்!
அளவில்லாப் பெரும்பரப்பில்
ஆசைமகள் நடக்கின்றாள்
வளர்கின்ற துன்பமெலாம்
மறந்தமகள் நடக்கின்றாள்!
உள்ளமெனும் பெரும்பரப்பில்
உணர்வுமகள் நடக்கின்றாள்
வெள்ளமெனப் பிரவாகம்
விந்தைமகள் நடக்கின்றாள்!
விதியென்னும் பெரும்பரப்பில்
விட்டமகள் நடக்கின்றாள்
எதிர்காலம் குறிக்கோளாய்
இந்தமகள் நடக்கின்றாள்!
நடந்துசெல்லும் மகளிர்தம்
நடையழகே என்வாழ்க்கை
கடந்து செலும் அவர்தமது
காலடிகள் என்கவிதை!
-பி.ச.குப்புசாமி.
Friday, June 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment