'நான்தான் மின் விளக்கு’ என்று
அறிவித்தாள் சிறுமி
மாறுவேடச் சுற்றில்.
தொப்பி அணிந்து அதன் மேல்
ஒரு பல்பு பொருத்தி இருந்தாள்.
மேலும் அவள் சொன்னாள்:
‘என்னை 1869&ம் ஆண்டு
அக்டோபர் மாதம் 9ம் தேதி
தாமஸ் ஆல்வா எடிசன்
கண்டுபிடித்தார்.
அன்று முதல் நான் இந்த
உலகத்துக்கு ஒளி அளித்து வருகிறேன்.
என்னை ஈரக் கையால் தொடக் கூடாது’
என்ற எச்சரிக்கையுடன் முடித்தாள்.
‘அது சரி. இந்த பல்பு இப்போது
எரிகிறதா இல்லையா?’ என்றாள்
நிகழ்ச்சி நடத்தியவள்.
பதில் ஏதும் சொல்லாமல்
சிரித்தாள் மின்விளக்குப் பிரகாசமாக!
-முகுந்த் நாகராஜன்.
Friday, June 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment