Tuesday, June 8, 2010

காரணமில்லாமல்...

எப்போதும் வருவதில்லை மழை
மழை வேண்டும் உழவர்கள்
மனம் கனத்துக்
காத்திருக்கும் சூழல்களில்
அதன் சுவடே தெரிவதில்லை.

நனையக் காத்திருக்கும்
சிறுவர்கள் விருப்பமும்
அதற்கொரு பொருட்டல்ல.

தாகம் தீர்க்கும் நதி
தாகம் கொண்ட பொழுதுகளில்
அது தலை காட்டுவதுமில்லை.

கட்டிடக் கூட்டுக்குள்
பதுங்கித் திட்டும்
மனிதர்களைக் காணவும்
சாக்கடையோடு இணைந்து
சாலைகளில் ஓடவும்

கனத்த மழைக்கோட்டுகளில்
ஒலியெழுப்பவுமே
ஆசைகொண்டு எப்போதும்
நகரங்களில் தன்னைக்
கொட்டித் தீர்க்கிறது
காரணமுமில்லாமல்
காரியமுமில்லாமல்!


-சு.திரிவேணி,கொடுமுடி.

No comments:

Post a Comment