Tuesday, June 8, 2010

பாடத்திட்டம்

காட்டுக்குள்
கட்டடங்கள்
குரோட்டன்சுக்குப் பின்னாலிருந்து
என் குழந்தை கேட்கிறது

அப்பா
அவரைச் செடி
ஒரு வித்திலைத் தாவரமா?
இரு வித்திலைத் தாவரமா?

அவரை பயிரிடும்
ஆத்தாவுக்கு இதற்கு
விடை தெரியாது.

மரவள்ளி பயிரிடும்
தாத்தாவுக்கு அதன்
லத்தீன் பெயர் தெரியாது.

அறிவியலும் புவியியலும்
தெரியும் என் குழந்தைக்கு
செடி வளர்க்கத் தெரியாது.
-முழுநிலவன்.

No comments:

Post a Comment