Monday, May 28, 2012

கவிதையின் தருணம்


மௌனமாகச்
சிறுமழை பெய்யும்
மாலை
சிற்றிரைச்சலுக்கு அடியில்
மண்டியிருக்கும் அமைதி
நேரம்
பழம் போலச்
சீராகக் கனிகிறது
மனம் கலைந்து மங்கி
முழுமையில் கரைகிறது
பேரண்டத்தின்
சிறு துளையென விரிந்திருக்கும்
என் கண்கள் முன்
ஒரு காகிதம் பறந்தாலோ
பூச்சி ஒன்று அசைந்தாலோ
கூடப் போதும்.

-பாலமுருகன்.

No comments:

Post a Comment