Wednesday, May 2, 2012

பயணம்

சருகென இறங்கும் பறவை
வந்த தூரம் வாலுக்குப் பின்னே
வியாபித்திருக்கிறது
எல்லை சிறு புள்ளியாய்
எதிர்பார்ப்புகளோடு துவங்கிற
பயணம் வெறுமனே நிகழ்கிறது

பறக்கும் வரை அது பறவை
அழியும் வரை அது காடு
நிலைக்கும் வரை அது மலை
இருக்கும் வரை யாம்.


-பொன். இளவேனில்.

No comments:

Post a Comment