Friday, May 4, 2012

ஒரு மிடறு நஞ்சு

கண்ணீரைத் தவிர வேறெதுவுமில்லா
இரவிலிருந்து வெளிப்படும்
வன்மத்தை எரிக்க
ஓராயிரம் காடுகளை
தீயிட வேண்டும்

நினைவுகளில் எரியும் நெருப்பு
நினைவுகளாய் எரியும் நெருப்பு
நினைவுகளை எரிக்கும் நெருப்பு

எந்த நெருப்பும்
நெருப்பைப் போலவே இல்லை
எந்த நினைவும்
நினைவைப் போலவே இல்லை
நெருப்பைவிட அதிகமாய் எரியும்
வேறேதோவொன்று
நினைவைவிட அதிகமாய் கனக்கும்
வேறேதோவொன்று.

-துரோணா.

No comments:

Post a Comment