Wednesday, August 3, 2011

உள்ளக் கிடக்கைகள்

மரப்பாச்சி பொம்மைக்கும்
மாராப்பு போட்ட நிலம்,
நீலவான் நிலவிற்கும்
ஆடைகட்டிப் பார்த்த மனம்,
இன்று-
அவிழ்த்துப் போடுவதுதான்
அழகாம்! ... ... ... ...
ஆடம்பரம் பெருக
ஐ.எம்.எப் உதவ
எல்லா நாயும் காலைத்தூக்க
எம் தேசமென்ன-
தெருவோர நடுகல்லா?


-ஆர். நீலா .
பேடிக்கல்வி

காலத்தால் அழியாத
கவியாக்கும் அவசரத்தில்
காளியம்மா வந்து
சூலத்தால் எழுதியதில்-
நாக்கு துண்டாகி,
பேச்சும் போச்சு!

- நா.முத்து நிலவன்.வானத்துப் பறவையை
வாகாய்ச் சுடுகிற சாமர்த்தியசாலியே
எங்கே
ஒரு அரையடி உயரம்
பறந்து காட்டு பார்க்கலாம்!

- பட்டுக்கோட்டை பிரபாகர்.மரம் செத்தால்
வீட்டுக்கு வரும்
மனிதன் செத்தால்
காட்டுக்குப் போவான்.

-மு. மேத்தா.ஏன்,எதற்கு
என்பது தெரியாது
எனினும் நிகழ்ந்துவிட்டது
ஏன் எதற்கு
என்பது விளங்காது
எனினும் நிகழ்கிறது
ஏன் எதற்கு
என்பது புரியாது
எனினும் நிகழும்

-மாலினி புவனேஷ்.நெடுநாள் வாடாது
வண்ணம் காட்டித்திகழும்
வாடாமல்லியாக வேண்டாம்
ஒருநாள் தட்பவெப்பம் கூட
தாக்குப்பிடிக்க வலுவின்றிப்
பொட்டென்று
பொசுங்கி உதிர்ந்தாலும்
அந்நாள் முழுதும்
மனம் நெகிழும் வாசம் தரும்
பகட்டில்லா
பவளமல்லியாகட்டும்
இந்த ஜன்மம்.

- நீல.பத்மநாபன்.சொல்லக் கூடாதென்றில்லை
சொல்லக் கூடாத ஒன்றை
எப்படி சொல்ல?

ஆவலுடன் ஓடி வந்து
எடுத்துக்கொள்ள யாருமின்றி
காற்றில் தன சுவையை
கசிந்தபடி
மரத்தை சுற்றிலும்
விழுந்து கிடக்கும்
பனம் பழங்களை போல்
என்னிடமே
வீழ்ந்து கிடக்கின்றன
என்
உள்ளக் கிடக்கைகள்.

-அழகிய பெரியவன்.

No comments:

Post a Comment