Wednesday, November 3, 2010

கதவு

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
"யார்"
என்று கேட்டேன்
"நான் தான்
சுசீலா
கதவைத் திற"என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

-நகுலன்.

No comments:

Post a Comment