Wednesday, November 3, 2010

நீ வருவதென்பது

பழுத்ததாய்த் தேடி வந்தமர்கிறது
கிளி.
எதுவென்று கேட்க முடியாது.
காடெங்கும் பாம்புகள்.
சொல்லித் தீராத கதை
ஒன்றும் புரிவதாக இல்லை.
உயர உயர எழும்புகிறது
சுவர்.
உறைக்குள் மின்னுகிறது
வாள்.
கதிரவன் மறையும் நேரமிது.
இருள் சூழ்ந்து இமைமூட
நீ வருவதென்பது
வராமலேயே இருப்பதாகிறது.

-அழகுநிலா.

No comments:

Post a Comment