Monday, November 1, 2010

வரம்


நின்றிருக்கிறேன் நானும்
அவ்விடத்தில்
மரமில்லாதொரு பொழுதில்
என்றாலும்
என் மீதில் அமர்ந்ததில்லை ஒரு நாளும்
எந்தப் பறவையும்
-குகை.மா.புகழேந்தி.
ஆத்தா அடிச்சி
அஞ்சாறு மணி நேரமாச்சு
அதென்னமோ
சாயந்தரம்
அப்பனக் கண்டதும் தான்
விபரம் சொல்லி வலிக்குது
குழந்தைக்கு !
-சக்திகா.

கூரையைப் பிய்த்துக் கொண்டு
கொடுக்கின்ற கடவுள்
முதலில் எங்களுக்கு
கூரையைக் கொடுக்கட்டும்...!
- ஆதம்பாவா.
என் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா
எங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி.
-மு.சுயம்புலிங்கம்.
”நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்”

வரம்

நான் என்ன கேட்டேன்?
நீ என்ன தந்தாய்?
புரியாததெல்லாம் புரியக் கேட்டால்,
புரிந்ததெல்லாம் புரியாதுபோக வரம் தருகிறாய்!
-குவளைக்கண்ணன்.

No comments:

Post a Comment