Sunday, November 21, 2010

பிரிய மழை

பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்

அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்

வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை.

- யுகபாரதி.

No comments:

Post a Comment