பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்
அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்
வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை.
- யுகபாரதி.
Sunday, November 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment