Wednesday, September 26, 2012

காத்திருக்கிறோம்

இந்த அறையை நோக்கி 
பூமியின் எப்பகுதியிலிருந்தும் 
ஒரு கடிதம்கூட எட்டிப்பார்த்ததில்லை 

இந்த அறைக்கு 
நண்பர் என்றுசொன்ன 
எந்த மனிதரின் காலடியும் பட்டதில்லை 

பறவையின் குரல் 
நாயின் குரல் 
வானின் குரல் 

எதுவும் தொட்டதில்லை 

சூரியனின் கதிருக்குக் 
காத்திருந்து காத்திருந்து 
மனமொடிந்ததுதான் மிச்சம் 

காற்று மட்டும் 
அறீயாமல் வந்து 
உயிரைக் காப்பாற்றுகிறது 

அறையும் நானும் 
காத்திருக்கிறோம் 
அறிமுகமான 
மனித முகம் வேண்டி 

 - பவுத்த அய்யனார்.
மேன்ஷன் கவிதைகள்.

No comments:

Post a Comment