பஞ்சாரக் கோழிகள் சிறகடிப்பும்
கட்டிப்போட்ட நாய்களின் உறுமல்களும்
சின்னக் குழந்தை
ஆற்றாமையில் வடிக்கும் கண்ணீரும்
பொருள் கொள்ளாது நிகழ்கிறது
கிடையில்
ஓர் ஆட்டுக்குட்டியின் பிரிவு
-கவிஞர் சங்கரபாண்டியன்.
சந்ததிகள்
வேரறுக்கப்பட்டதை எண்ணி
புகைகிறது
அடுப்படியில்
மரம்.
-கவிஞர் சுரேஷ்.
No comments:
Post a Comment