Wednesday, September 26, 2012

வார்த்தைகளிலான பிரியம்



பிரியங்களை அறிவிக்கும் வார்த்தைகளை 
கூறி விளையாடும் பருவம் கடந்துவிட்டோம் 
என்றாலும் என் அன்பை 
வார்த்தைகள் கொண்டே 
வெளிப்படுத்த யத்தனிக்கிறேன் 

வார்த்தைகளற்ற அன்பை 
உணர மாட்டாயாயென்பது
எப்பொதும் உன் கேள்வியாக இருக்கிறது 
நீயும் வார்த்தைகளின்றி 
உணர்வாய் என்று தெரிந்தே 
சொல்லிக் கொண்டிருக்கிறேன் 
என் பிரியங்களை 

சொன்னால்தான் தீருமென்றில்லை
எதையும் அடைத்து வைக்கும் 
தீர்மானத்தை வலுக்கட்டயமாக 
அதீத அறிவோடுடான செயல்பாடுகளை தவிர்க்கிறேன் 

வார்த்தைகளால் அவிழ்கவியலாத
இறுக்கம் புதை மணலாக 
எனை புதைத்துக் கொள்ளலாம் 
வார்த்தைகளிலான பிரியங்களே
எப்பொதும் உதவியாக இருகின்றது 

உணர்வுகளும் வார்த்தைகளும் 
நிறைந்ததே என் பிரியம் 
தினம் பெய்யும் மழையாக
அதைக் கொண்டு உனை நனைக்கவே 
எப்பொதும் என் விருப்பம் 

-லாவண்யா சுந்தரராஜன் 
'நீர்க்கோல வாழ்வை நச்சி"

No comments:

Post a Comment