பனிப்பாளங்களின் குளிர்ச்சியை
என் கால்கள் தாங்காது
ஆனால் அதன் முடிவில் நீயிருந்தால்
உனக்காகத் துள்ளி வருவேன்
பனிக் கதவுகள் ஒரு பொருட்டல்ல....
நடுப்பகல் சூரியக் கைகளின்
வெம்மை தாங்காது என் கால்கள்
ஆனால் எரிமலையின் உச்சியில்
உன்வீடு கட்டப்பட்டிருந்தால்
உனக்காக அக்னியில் நடமாடுவேன்
திரவகக் குழம்புகள் ஒரு பொருட்டல்ல....
மென்மைப் பூக்களை மட்டுமே
தொடுவேன் நான் ; என் கால்கள்
முட்களின் கூர்மையைத் தாங்காது
ஆனால் முட்கள் என் கால்களை
முத்தமிடுவதை நீ விரும்பினால்
சாகும்வரை அதில் நடனமாடுவேன்
முட்கள் எனக்கு பொருட்டல்ல.....
ஆனால்
உன் கோழைத்தன்மையை என்
கால்கள் பொறுத்துக்கொள்வதேயில்லை
மிதித்து அழிக்கவேவிரும்புகின்றன
காதலை சிலசமயம்
கால்களும் தீர்மானிக்கின்றன.
- கவிஞர் தாமரை .
"ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்"
No comments:
Post a Comment