Wednesday, July 11, 2012

அதுவே அதுவே உனது வேளை

நான் இல்லாத வேளை
நீ என்ன செய்து கொண்டிருந்தாய்
என் மகளே
வயலின் இசைத்துக் கொண்டு
தொலைபேசியில் உன் நண்பர்களோடு
அறையினுள்
அல்லது
உனது விரல்களில் வழியும்
வர்ணங்களின் கோடுகளோடு
அப்படியே தான்
நான் இல்லாத வேளையில்
என்ன செய்து கொண்டிருக்கிறாயோ
அதுவே அதுவே
உனது வேளை
என் மகளே.

-அப்பாஸ்
"ஆறாவது பகல்."

எட்ட பார்த்த நீராயில்லை
இறங்கி நின்றது

இலை தழை புறந்தள்ளி
விலக்க முயன்ற நீராயில்லை
பருகச் சூழ்ந்த்து

இளைப்பாறுகையில்
அள்ள முனைந்த நீராயில்லை
குடித்துத் தீர்த்த்து

-வி. அமலன் ஸ்டான்லி.
"மேய்வதும் மேய்ப்பதும் யாது..."

பூனை ஒரு விலங்கு
அதற்கு தெரிந்திருக்கிறது
பிரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக் கொள்வதென
ஸ்பர்சிக்கும போது
நகங்களை எவ்வாறு மழுங்கிக்கொள்வதென

-கவிஞர் இசை
"உறுமீன்களற்ற நதி"

எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்
தத்துவம் காதல்
இங்கிதம் சங்கீதமிப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய்விடும்.

-வண்ணநிலவன்.
"தங்களுக்கும் ஒரு இறந்த காலமும்
ஏக்கமும் உருவாகுமென்று
ஸ்கூட்டர்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை
அவைகளுக்கும்
ஒரு காவிய முடிவும்
வழியனுப்புதலும் நிகழ்ந்து விட்டன.
மஞ்சள் விளக்குகள்
கடற்காற்று
அவைகளின் நினைவை அழித்துவிடுகின்றன
பட்டறைகளிலும்
எங்கோ இருட்டறைகளிலும்
கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றன
இந்த நெடிய பூமியில் எல்லோரும்
தொலைந்து போகும் அபாயத்தை எண்ணி..."

-சங்கரராம சுப்பிரமணியன்.

No comments:

Post a Comment