தன்னந்தனியனாய்
தவறவிட்ட உன்னைத் தேடி
பதற்றப்பட்டு பரபரக்க
உரத்து உன் பெயர் கூவியழைக்க
திராணி இம்மியுமில்லை
கானுயிர்கள் விழிப்புறும் பட்சத்தில்
சருகுகளின் சப்தத்தைத் தவிர்க்க
நுனிக்காலில் நகர்கிறேன்
பட்சிகளின் பொந்துகளிலும்
பட்டைகளின் இடுக்குகளிலும்
சொல்லிவைக்கிறேன் உன்னைப்பற்றி
எங்கேனும் கண்டால்
தகவல் அனுப்பவென்று
சளைக்காமல் தொடர்வேன்
அதுவரையில்
கானகத்தைத்
தீண்டாதிருக்க வேண்டும் தீ
-வி.அமலன் ஸ்டேன்லி.
Thursday, July 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment