Tuesday, January 24, 2012

ஆகாயத்தின் மக்கள்

கடவுளுக்காக திறந்த வாசலில்
சட்டென நுழைகிறது காற்று
கடவுளுக்காக விரித்த பாயில்
வந்து படுக்கிறது நாய்.
கடவுளுக்காக பாடும் பாடல்
நமது செவிக்கே திரும்புகிறது
வேலியேதுமற்ற
கடவுளின் தோட்டத்து மண்ணில்
என் பாத சுவடு.


"ஆகாயத்தின் மக்கள்"
-அழகு நிலா.

1 comment: