Sunday, February 19, 2012

கவிதை இறகு- மாசி


தடுக்கி விழுந்தால் மட்டும் அ… ஆ…
சிரிக்கும் போது மட்டும் இ… ஈ…
சூடு பட்டால் மட்டும் உ… ஊ…
அதட்டும் போது மட்டும் எ… ஏ…
சந்தோசத்தின் போது மட்டும் ஐ…
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ… ஓ…
வக்கனையின் போது மட்டும் ஔ…
விக்கலின் போது மட்டும் ஃ…
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழி என்று.


- யாரோ(பெயர் தெரியவில்லை).

No comments:

Post a Comment