Wednesday, February 29, 2012

நெடுஞ்சாலையில் சிதறிய மனிதநேயம்

தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை

மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது நெடுஞ்சாலை

“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”

-மன்னார் அமுதன்.
கை வலிக்க
கொஞ்ச தூரத்திற்கொருதரம்
கைப்பை சுமையை
இறக்கி கொண்டுவரும்
முகமறியா
சகோதரியிடத்து
"கொடுங்கக்கா நாங் தூக்கியார்றங்"
எனச் சொல்லியபோது
அவள் பார்வையில் தெரிந்தது
திருடன் என
என் முகம் ....

- படைவீடு அமுல்ராஜ்.

No comments:

Post a Comment