Tuesday, January 24, 2012

உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்

'சிற்பிக்கும்
சிலைகளுக்கும் குறுக்கே
அர்ச்சகராகவும்

தச்சனுக்கும்
நிலைக் கதவுகளுக்குமிடையே
வைதீகராகவும்

தட்டானுக்கும்
தாலிக்கும் நடுவில்
ப்ரோகிதராகவும்

காலம்காலமாய்
எங்கள் உழைப்பில்
கொழுத்துப் பெருத்த நீ
வந்திருக்கப்பிடாதோ
கொல்லனுக்கும்
அவன் கொடுவாளுக்கும்
குறுக்கே'


'உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’
-தாணுபிச்சையா.

No comments:

Post a Comment