Tuesday, January 24, 2012

குரோடன்களோடு கொஞ்ச நேரம்

தாவோ தத்துவவாதி சுவாங் ட்ஸூ
அவருக்கு தெரியவில்லையாம்
கண்ட கனவில்
சுவாங் வண்ணத்துப் பூச்சியாக மாறினாரா
வண்ணத்துப் பூச்சி சுவாங்காக மாறியதா

அவருக்கு கனவில்
எனக்கு நனவில்
செடி ஒன்று
கவனிப்பு வேண்டி வாடிக் கிடப்பது
யாராலோ எப்படியோ உடைப்பட்டு கிடக்கும்
மண் தொடியிலா என் இதயத்திலா

இடைவெளி என்பது நிலைக்கண்ணாடி

குரோட்டன்கள் என்னை வளர்க்கின்றன
நான் குரோட்டன்கள் வளர்க்கிறேன்

செடிகளால் முடியுமா மனிதர்களை வளர்க்க
செடிகொடிகள் இல்லாமல் முடியுமா
மனிதர்களால் வளர

பிறகு பேசலாம்
முதலில் செடியைக் கவனிக்கணும்
குடிக்க நீர் குந்த மண்.


"குரோடன்களோடு கொஞ்ச நேரம்"
-பழமலய்.

No comments:

Post a Comment