தாவோ தத்துவவாதி சுவாங் ட்ஸூ
அவருக்கு தெரியவில்லையாம்
கண்ட கனவில்
சுவாங் வண்ணத்துப் பூச்சியாக மாறினாரா
வண்ணத்துப் பூச்சி சுவாங்காக மாறியதா
அவருக்கு கனவில்
எனக்கு நனவில்
செடி ஒன்று
கவனிப்பு வேண்டி வாடிக் கிடப்பது
யாராலோ எப்படியோ உடைப்பட்டு கிடக்கும்
மண் தொடியிலா என் இதயத்திலா
இடைவெளி என்பது நிலைக்கண்ணாடி
குரோட்டன்கள் என்னை வளர்க்கின்றன
நான் குரோட்டன்கள் வளர்க்கிறேன்
செடிகளால் முடியுமா மனிதர்களை வளர்க்க
செடிகொடிகள் இல்லாமல் முடியுமா
மனிதர்களால் வளர
பிறகு பேசலாம்
முதலில் செடியைக் கவனிக்கணும்
குடிக்க நீர் குந்த மண்.
"குரோடன்களோடு கொஞ்ச நேரம்"
-பழமலய்.
Tuesday, January 24, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment