Thursday, October 21, 2010

நனைவது

நானும்
நீயும்
ஒரே மழையில்
நீ
குளிருகிறது என்றபோது
நானும்
குளிருகிறது என்றேன்
ஒரே மழை
ஒரே நேரத்தில்
குளிர்விக்கிறது
வெவ்வேறாய் இருக்கும்
ஒன்றை

-கோகுலக்கண்ணன்.

No comments:

Post a Comment