முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்
ஒரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும்படி கேட்டவளிடம்
சொன்ன காரணத்தை
இதெல்லாம் ஒரு காரணமா?
என்றவளையும் சேர்த்து
இப்ப இவனிடம்
ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது.
-பா.ராஜாராம் .
Thursday, October 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment