அன்பை வார்த்தைகளில்
சொல்வதை விட
சொல்வதை விட
மிக இலகுவான செயல் எதுவுமில்லை..
அன்பை எழுத்துக்களில்
பதிய வைப்பதை போல
மிக துயரமான கவிதை எதுவுமில்லை..
அன்பை புரிந்து கொள்ள
மறுப்பது போல
மிக மோசமான வலி எதுவுமில்லை..
அன்பை தயவு தாட்சண்யமின்றி
மறுதலிப்பது போல
ஒரு பெருஞ்சோகம் எதுவுமில்லை..
அன்பை அது எவ்வளவு ஆழமாயினும்
புறக்கணிப்பது போல
மிகக் கொடிய வேதனை வேறெதுவுமில்லை..
-இவள் பாரதி.
என் வீட்டின் மல்லிகைச் செடியில்
பூத்திருக்கும் பூக்கள் பற்றியோ…
ரோஜா செடியில் பூத்திருக்கும்
ரோஜாக்களைப் பற்றியோ..
முருங்கை மரத்தில் வால் வாலாய்
தொங்கும் முருங்கை காய் பற்றியோ..
நெல்லி மரத்தில் கொத்துக் கொத்தாய்
ஒட்டியிருக்கும் நெல்லிக்கனிகள் பற்றியோ..
கொய்யா மரத்தில் பூக்கள்
விட்டிருப்பது பற்றியோ…
உன்னிடம் சொல்ல என்ன இருக்கிறது?
அதைப் பற்றியெல்லாம் நம்
திருமணத்திற்கு பிற்பாடு ஆற அமர
பேசிக் கொள்ளலாம்….
முதலாக என்னை காதல் செய்!
-வா.மு.கோமு .
உன் கனத்த கதவுகளை
அகலத் திறந்துகொண்டு
இருண்ட காலங்களில்
வெளிச்சமாய் வருவேன் நான்
எனினும்...
எனக்காக காத்திராதே.
-மணிபாரதி துறையூர்.
இந்த இரவையே
உனக்கு
கடிதமாக அனுப்புகிறேன்
அஞ்சல்தலையாய்
அந்த நிலா!
உனக்கு
கடிதமாக அனுப்புகிறேன்
அஞ்சல்தலையாய்
அந்த நிலா!
-பழனிபாரதி.
நமது முதல் சந்திப்பில்
நீ எனக்காக செய்த புன்னகைக்கும்
அப்போதே தெருவில் எவனோ உரைத்த
அசரீரிக் குரலான
”சாவுடா மவனே”வுக்கும்
என்ன தொடர்பிருக்குமென்று
யோசித்துக் கொண்டிருக்கும்போதே
சுவாசம் திணறத் துவங்கிவிட்டது!
-குகை.மா.புகழேந்தி.
யாருமில்லாத அறைகளிலெல்லாம்
காதலை
காதலிக்க முடியாது
எல்லோரும் பார்க்கமுடிகிற
பௌர்ணமி நிலவைப் போல
பகிரங்கமாக காதலி
அதற்குப் பெயர்தான்
காதல்!
-குகை.மா.புகழேந்தி.
காதலை
காதலிக்க முடியாது
எல்லோரும் பார்க்கமுடிகிற
பௌர்ணமி நிலவைப் போல
பகிரங்கமாக காதலி
அதற்குப் பெயர்தான்
காதல்!
-குகை.மா.புகழேந்தி.
No comments:
Post a Comment